தொழிற்தலங்களுக்கு வாகனங்களில் செல்பவர்கள் செல்ல முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளது. தொழிலுக்காக முச்சக்கரவண்டி ஓட்டுபவர்கள் தமது அன்றாட தொழில் நடவடிக்கையை எதிர்கொள்ள பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளனர். மோட்டர் சைக்கிள் பாவனையாளர்கள் பெற்றோல் இன்றி தமது பயணங்களை ஒத்திவைக்க நேர்ந்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல மணித்தியாலங்களுக்கு வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தொழில்களுக்கு சென்று வந்து பல மணித்தியாலங்கள் எரிபொருள் நிலையங்களில் தமது நேரத்தை வீணாக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்த நாள் பணிக்காக செல்வதற்கு முடியாத மனஅழுத்தங்களுக்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸ் பாதுகாப்போடு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றன.
இந்த பெற்றோல் பற்றாக்குறை எதிர்வரும் 9 ஆம் திகதியே வழமைக்குத் திரும்பும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(DC)