நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை ஏற்பட்டு இன்றுடன் ஐந்து நாட்கள் -மக்கள் அசெளகரியம்

நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை ஏற்பட்டு இன்றுடன் ஐந்து நாட்கள் கடந்துள்ள நிலையில் மக்கள் பல்வெறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

தொழிற்தலங்களுக்கு வாகனங்களில் செல்பவர்கள் செல்ல முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளது. தொழிலுக்காக முச்சக்கரவண்டி ஓட்டுபவர்கள் தமது அன்றாட தொழில் நடவடிக்கையை எதிர்கொள்ள பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளனர். மோட்டர் சைக்கிள் பாவனையாளர்கள் பெற்றோல் இன்றி தமது பயணங்களை ஒத்திவைக்க நேர்ந்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல மணித்தியாலங்களுக்கு வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தொழில்களுக்கு சென்று வந்து பல மணித்தியாலங்கள் எரிபொருள் நிலையங்களில் தமது நேரத்தை வீணாக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்த நாள் பணிக்காக செல்வதற்கு முடியாத மனஅழுத்தங்களுக்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸ் பாதுகாப்போடு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றன.

இந்த பெற்றோல் பற்றாக்குறை எதிர்வரும் 9 ஆம் திகதியே வழமைக்குத் திரும்பும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(DC)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -