முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நசீர் வழங்கிய உயர் பதவிகளை விடியுமுன்னர் பறித்தெடுத்த கிழக்கின் ஆளுநர் ரோகித

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது ஆட்சிக்காலத்தில் வழங்கிய முக்கிய கெளரவ பதவிகள் மூன்றினை கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம முன்னறிவித்தல் ஏதுமின்றி நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாண சபை வீடமைப்பு அதிகார சபைத் தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்த  ஓட்டமாவடியைச் சேர்ந்த முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.ஹமீட், சுற்றுலா அபிவிருத்தி தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளராக இருந்த ஏறாவூரைச் சேர்ந்த எஸ்.எம்.சறூஜ், தனியார் போக்குவரத்து அதிகாரசபை தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சமந்த அபே விக்ரம ஆகிய மூன்று  தவிசாளர்களே அதிரடியாக முன்னறிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது சம்மந்தமாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் அதாவது முன்னாள்  முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட தவிசாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இம்போட்மிரர் செய்திப்பிரிவு கேட்டபோது:

எந்த முன்னறிவித்தலும் இல்லாமல் பதவி விலக்கப்பட்டுள்ளோம் எந்த அறிவித்தலும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

எதுஎவ்வாறாயினும் ஆளுநர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தத்துணிவில் நல்ல சேவைகளை கிழக்கு மக்களுக்காக செய்ய வேண்டும் என்பதே எமது கோரிக்கையுமாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -