மனித வலு பயிற்சி நெறியில் கலந்துகொள்ள வைத்தியர் நக்பர் கட்டார் பயணம்

பைஷல் இஸ்மாயில் –

சுகாதார அமைச்சின் ஆலோசகரும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் மனித வலு முகாமைத்துவ பயிற்சி நெறியில் கலந்துகொள்வதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஆம் திகதி கட்டார் நாட்டுக்கு பயணமாகின்றார்.

சிங்கப்பூர் வெளிநாட்டு அமைச்சு மற்றும் கட்டார் நாட்டு பொது நிருவாக அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற இந்த மனித வலு முகாமைத்துவ 5 நாள் பயிற்சி நெறிக்காக இலங்கையிலிருந்து 5 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் கிழக்கு மாகாணத்திலிருந்து செல்லும் ஒரே அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சி நெறி நாளை திங்கட்கிழமை 13 ஆம் திகதி தொடர்க்கம் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கட்டார் பொது முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளதாகவும், இப்பயிற்சி நெறிக்காக இலங்கை உட்பட 12 நாடுகளில் இருந்து 25 பேர் கலந்துகொள்ளவுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் ஆலோசகரும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் செயலாளர் ஜயசேகர, நீர்வழங்கள் வடிகால் அமைச்சின் மேலதிகச் செயலாளர் வீரசிங்க, காணித் திணைக்களத்தின் ஆணையாளர் அஜித் விக்ரமரத்ன, பிரதமர் அமைச்சின் சட்டப்பிரிவின் செயலாளர் ஹஸ்னி ஜயகுமார் உள்ளிட்ட 5 பேர் இலங்கையிலிருந்து செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -