'ஐஸ்' கடத்தி வந்த சென்னைவாசிகள் இருவர் கைது

ரஹ்மான் அப்துல் அஸீஸ்-

ஐஸ் என்று சொல்லப்படும் போதை மருந்தைக் கடத்திவந்த சென்னைவாசிகள் இருவரை கொழும்பு விமான நிலைய போதை தடுப்புப் பொலிஸார் கைது செய்தனர்.

சென்னையில் இருந்து இன்று காலை இலங்கை வந்தடைந்த விமானத்தில் குறித்த இருவரும் பயணித்துள்ளனர். அவர்களில் ஒருவரை சோதனையிட்ட பொலிஸார், அவரது சட்டையின் உட்புறத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிராம் ஐஸ் போதை மருந்தைக் கைப்பற்றினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், குறித்த போதை மருந்தை தனக்குத் தந்தவர் என்று மற்றொருவரை அடையாளம் காட்டியுள்ளார். அவரைக் கைது செய்த பொலிஸார், அவரிடம் இருந்து 10 கிராம் போதை மருந்தைக் கைப்பற்றினர்.

இருவரும் தற்போது மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -