திருகோணமலை-சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட உடப்புக்கேணி பகுதியில் உழவு இயந்திரம் தடம் புரண்டு வீலுக்குள் சிக்குண்டதில் இளைுனொருவன் இன்று (10) மாலை 5.30மணியளவில் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
உழவு இயந்திரத்தில் வயல் உழுதுவிட்டு உழவு இயந்திரத்தை கழுவுவதற்காக தண்ணீர் காணப்பட்ட இடத்திற்குள் இறக்கிய போது உழவு இயந்திரம் புரண்டதாகவும் அதில் இருந்த வீலுக்குள் சிக்குண்டமையினால் இளைஞன் உயிரிழந்ததாகவும் தெரியவருகின்றது.
குறித்த இளைஞன் ஈச்சிலம்பற்று-விநாயகபுரம் பகுதியைச்சேர்ந்த சிறிகாந் சுரேன் (18வயது) எனவும் தெரியவருகின்றது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
