உழவு இயந்திரம் புரண்டதில் இளைஞன் மரணம்

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை-சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட உடப்புக்கேணி பகுதியில் உழவு இயந்திரம் தடம் புரண்டு வீலுக்குள் சிக்குண்டதில் இளைுனொருவன் இன்று (10) மாலை 5.30மணியளவில் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

உழவு இயந்திரத்தில் வயல் உழுதுவிட்டு உழவு இயந்திரத்தை கழுவுவதற்காக தண்ணீர் காணப்பட்ட இடத்திற்குள் இறக்கிய போது உழவு இயந்திரம் புரண்டதாகவும் அதில் இருந்த வீலுக்குள் சிக்குண்டமையினால் இளைஞன் உயிரிழந்ததாகவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞன் ஈச்சிலம்பற்று-விநாயகபுரம் பகுதியைச்சேர்ந்த சிறிகாந் சுரேன் (18வயது) எனவும் தெரியவருகின்றது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -