கொட்டகலையில் மாவா போதை பொருள் கலஞ்சியசாலை சுற்றிவளைப்பு 100 கிலோ மாவா மீட்பு






மு.இராமச்சந்திரன்-


லையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த பெருந்தொகை மாவா போதை பொருள் நிலையமொன்று கொட்டகலையில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை அதிரடிபடையினரும் அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து 18.11.2017 மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 100 கிலோ மாவா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுறிவளைப்பின் போது மாவா போதை பொருள் உட்பட இனிப்பு பானங்கள் புகையிலை போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை பொலிஸ் பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் வழக்கு பதிவு செய்து அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அட்டன் கலால் திணைக்கள அதிகாரி தெரிவித்தனர்.  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -