எஸ்.அஷ்ரப்கான்-
பாலமுனையைச் சேர்ந்த எம்.கே. இப்னு அஸார் Chief Inspector of Police- பிரதம பொலிஸ் பரிசோதகர் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகஇன்று 30.10.2017 திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமய தலைவர்கள் மற்றும் பல் துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தனது கடைமையை பொறுப்பேற்றுக் கொண்ட சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அஸார் உரையாற்றும்போது,
உண்மையான உளத்துாய்மையுடன் நாம் சேவையாற்றும்போது பொலிசார்-மக்கள் இடையே சிறந்த சிநேகிதத் தொடர்பு ஏற்படும். இதனுாடாக நாம் மக்களுக்கான சிறந்த சேவையை செய்வதற்கு முன்நின்று உழைப்போம். நீதியும் ஒழுக்கமுமுள்ள சமூகமொன்றை கட்டியெழுப்பி பிரதேச தமிழ் முஸ்லிம் உறவை மேம்படுத்துவதிலும் நாம் அயராது உழைப்போம். அப்போது எமது பொலிஸ்துறை பணி மூலம் நீதியை நிலை நாட்ட முடியும்.
இப்பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நான் இரவு பகல் பாராது உழைக்க காத்திருக்கின்றேன். அதற்காக 24 மணி நேரமும் கடமைசெய்ய நான் தயங்க மாட்டேன்.
பிரதேச மக்களும் தயங்காமல் உங்களது பிரச்சனைகளை என்னிடம் வந்து முன்வைக்கலாம். அதற்கு என்னால் முடியுமான சகல உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் சட்டத்தின் முன்நின்று செய்வேன். இதற்காக உங்களது ஒத்துழைப்பு எனக்கு என்றும் தேவை என குறிப்பிட்டார்.
பொலிஸ் துறையில் இணைந்து பல்வேறு பதவிகளில் அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இவர் சேவையாற்றியிருந்தார். தனதுபதவிக்காலத்தில் பிரதேசத்தின் தமிழ் முஸ்லிம் உறவுக்கான பாலமாகத் திகழ்ந்த இவர், பொலிஸ் மற்றும் மக்கள் தொடர்பாடலில் சிறந்த ஒரு அதிகாரியாகசேவைற்றி வந்த நிலையிலேயே இவ்வாறு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.