கல்குடாவுக்கான அமைப்பாளராக ஹாறூன் மௌலவி நியமனம்



முர்ஸித்-
ட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதிக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக மௌலவி அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தின் போது இந்த பதவி கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் கடந்த 12ம் திகதி வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவர் கல்குடாவில் கடந்த 7வருட காலமாக அல்-கிம்மா எனும் சமூகசேவை நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் பணிப்பாளராகவும் அரேபிய தனவந்தர்களின் மூலம் கிடைக்கப்பெறும் உதவிகளைக் கொண்டு பல வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குதல் மற்றும் அடிப்படைத் தேவைகளான சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுத்தல், வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உதவுதல்.என்று பல சேவைகளையும் செய்து வருகின்றார்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -