ஆட்டோவில் திருடி வந்த எருமை மாட்டுடன் 2 சந்தேக நபர்கள் கைது.



முர்சித் வாழைச்சேனை-

கிரான் புலியாந்தகல் பிரதேசத்தில் இருந்து எருமை மாடு திருடி வெட்டப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட போது முச்சக்கர வண்டியையும், இரண்டு சந்தேக நபர்களையும் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இரவு நேரங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதை தடுக்கும் வகையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனடிப்படையில் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் கிரான் பிரதேசத்தில் வைத்து குறித்த முச்சக்கர வண்டியையும், இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் பிறைந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரும், கிரான் பிரதேசத்தை சேர்ந்த தமிழர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -