அண்மைக்காலமாக எமது கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்ற திண்மக்கழிவுகளை அகற்றல் தொடர்பாக இன்று புதன்கிழமை 20.09.2017 அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை இளைஞர் கூட்டமைப்பு (Youth Alliance Sri Lanka) அமைப்பின் தலைவருமான Z.M ஸாஜித் மற்றும் Youth Unity Power (YUP) அமைப்பின் தலைவர் M.M.M றிப்னாஸ் பிரதி அமைப்பாளர் இபாக் அஹமட் ஆகியோர் கல்முனை மாநகர ஆணையாளர் கெளர.லியாகத் அலி அவர்களை நேரடியாக சந்தித்து கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் திண்மக்கழிவுகள் அகற்றுதல் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்தலோசிக்கப்பட்டு குறித்த அமைப்பினால்
அமைப்பினால் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான செயற்றிட்டமோன்று ஆணையாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இச் செயற்றிட்டத்தினூகடாகவும் கல்முனை மாநகர சபையின் எதிர்கால செயற்றிட்டங்கள் ஊடாகவும் இந்த பாரிய பிரச்சினையான திண்மக்கழிவுகளை அகற்றல் சம்பந்தமாக விரைவாக செயற்பாடுகளை மேற்கொள்வதாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் குறித்த அமைப்புகளுக்கு கல்முனை மாநகர ஆணையாளர் கெளர.லியாகத் அலி அவர்கள் வாக்களித்தார்.
