சேற்றில் இறந்த சின்ன மகனே..!

சேற்றில் இறந்த சின்ன மகனே
++++++++++++++++++++++++++

அகதியாய்
அலைவதிலும்
சகதியில்
சாவது மேல் என
கண்ணை மூடிக் கொண்டாயா
கண் மணியே

ஆங்சாங் சூகி சொன்ன
ஆயுதந் தாங்கிய
அதி தீவிரவாதி மகனே
அந்த
அரக்கியிடம்-உன்
அப்பாவி முகம் காட்டு.
பச்சைப் புள்ளைங்க
பயங்கரவாதியாண்ணு -அந்தப்
பைத்தியம் பார்க்கட்டும்.

சோற்றைக் கூட
சொட்டுப் போல் நசித்து
ஊட்டுவார்களடா
உன்
சின்ன வாய்க்கு
சீவன் இல்லை என்று,
சேற்றில் போட்டு
சின்னப் பிஞ்சை
சிதைத்த கயவர்கள்
சின்னாபின்னமாகிப் போகட்டும்

பூக்கும் முன்னே
மொட்டைக் கருக்கிய
மொட்டைகள்
ஒரு நாள்
உணர்ந்து கொள்ளும்.

இந்த இறப்புக்களின் விலை
என்ன என்பதை

ஏந்திய கைகளுக்கு
என்றோ ஒரு நாள்
இறங்கும் தீர்ப்பு.
அந்தத் தீர்ப்பில்
இந்த
அரக்கர்கள்
அரைக்கப் படுவார்கள்

இந்தச்
சேறும் சின்ன மலர்களும்
சிலகாலத்துக்கே...
Mohamed Nizous
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -