முச்சக்கரவண்டி விபத்து - சாரதியும், பயணியும் தப்பி ஓட்டம்




க.கிஷாந்தன்-

முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி வீட்டின் கூரை மீது விழுந்ததில் இருவர் காயம்பட்ட நிலையில் தப்பி ஓடியுள்ளனர்


அட்டன் நகரத்திலிருந்து அட்டன் காமினிபுர பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி காமினிபுர பிரதேச பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் மோதுண்டு சுமார் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து குடியிருப்பின் மீது வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இவ்விபத்து 25.09.2017 அன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்தவரும் தப்பி ஓடியுள்ளனர். அதன்பின் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


இவ் விபத்தில் முச்சக்கரவண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதோடு, வீட்டிற்கும் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.


இவ்விபத்து குறித்து அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -