நல்லாட்சி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் இன்று புஷ்வானம்.

ஒலுவில் ஜெலில்-

ப்பாவி முஸ்லிம்களை கொத்து கொத்தாக படுகொலை செய்யும் மியன்மாருக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய இலங்கை இனவாத போக்கு டான் பிரசாத் குழுவினர்.

நாட்டின் தேசிய கொடியின் சிறுபாண்மை சமூகத்தை பிரதிபலிக்கக் கூடிய பகுதிகளை வெட்டி நீக்கிவிட்டு' தான்தோன்றித் தனமான போக்கில் சட்டத்தை மீறி பகிரங்கமாகவே கொடியை கையில் ஏந்தியவன்னம் வீதி வீதிகளாக வலம் வருகிறார்கள் இன்று.

இதனை இந்த நல்லாட்சி சட்டம் கண்டு கொள்ளாமல் இருப்பதன் மர்மம்தான் என்ன? அப்படியென்றால் நல்லாட்சியின் நிகழ்ச்சி நிரலில்தானா இவர்கள் இயங்குகிறார்கள்? இனவாதிகளை இந்த நல்லாட்சி ஆதரிக்கிறார்களா? என்ற சந்தேகம் எழுகிறது முஸ்லிம்கள் மத்தியில்.

அன்று மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியின் போது ஞானசார போன்ற இனவாதிகள் இதே வேலையைத்தான் செய்தார்கள்' அப்போது எத்தனை மீடியாக்கள் அதை மக்கள் மத்தியில் திரையிட்டு தலைப்பு செய்தியாய் போட்டுக் காட்டிக் கொண்டே இருந்தார்கள்.
ஆனால் இன்று அந்த மீடியாக்களுக்கு தெரியாமல் விட்டது ஏனோ புரியவில்லை?

அதுமட்டுமா எத்தனை அரசியல்வாதிகள் (முஸ்லிம், தமிழ், சிங்கள) எல்லோரும் இதே கொடி விடயத்தை தூக்கி பிடித்துக் கொண்டு மேடைக்கு மேடை கொக்கரித்தார்கள் அன்று' ஆனால் அவர்களுக்கு இன்று இவ்விடயம் தெரியாமல் விட்டது ஏனோ?

அன்று நீதிக்காக பகிரங்கமாகவே மக்களோடு மக்களாக குரல் கொடுத்தவர்கள்.
இன்று பதவிகளுக்காக சோரம் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்க தோணுகிறது இவர்களின் அமைதி.

அன்றைய ஆட்சியில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்றவர்கள். இன்றைய ஆட்சியில் சட்டம் என்பது ஒரு சிலபேருக்குத்தான் என்பதா இவர்களின் எண்ணம்?

அன்று நீதிக்காக உரிமைக்காக குரல்கொடுத்த சம்மந்தன் ஐயாகூட இன்று பாராளுமண்றத்தில் ஆசனம் கிடைத்தவுடன் எல்லாவற்றையும் மறந்து விட்டாரா என்ன? அல்லது தான்சார்ந்த சமூகத்த்தின் பிரச்சினையல்ல அவர்கள் எப்படி போனாலும் நமக்கென்ன என்ற நிலைப்பாட்டிலா?
அப்படியென்றால் அன்று அவ்வளவு கஷ்டப்பட்டடு மக்களை திசை திருப்பியதன் நோக்கம்' இந்த ஆசனத்தில் அமருவதற்குத்தானா என்றும் எண்ணத்தோன்றுகிறது.

தாம் ஆட்சிக்கு வந்தால் இனவாதிகளை தலைதூக்க விட மாட்டோம் என்று வீரப்பு பேசிய நல்லாட்சியின் வாக்குறுதிகள் அனைத்தும் இன்று செயளலவில் புஷ்வானமாகி விட்டது என்பதை பார்க்கும்போது வேதனை மட்டுமே விடையாகிறது.

எனவே இதையெல்லாம் பார்க்கும்போது
"அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு என்பது பழமொழி"
நல்லாட்சியல்ல எந்த வலாய் ஆட்சி வந்தாலும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது என்பது புதுமொழியாகிறது.

இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியமே என்ற நிலைதான் தற்போது இந்தாட்சியிலும் நடைபெறுகிறதே தவிர' வித்தியாசம் ஒன்றுமில்லை என்பதே முற்றிலும் உண்மை.

தண்ணிக்கு இழுக்கும் ஒரு கூட்டமும்' தவிட்டுக்கு இழுக்கும் மறு கூட்டமும்' முஸ்லிம் அரசியலில் இருக்கும்வரை இந்த நிலமை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது நன்றாக புரிகிறது.

அன்று ஞானசார அணியினர்" இன்று டான் பிராசாத் குழுவினர்" நாளை எந்த குழுவினர் என்பதை நமது அரசியல்வாதிகளே தீர்மானிக்க வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -