100 மணித்தியால சிங்களப்பயிற்சிநெறியில் 100 அதிபர்கள் .

காரைதீவு நிருபர் சகா-

திபர் தர உத்தியோகத்தர்களுக்கான 100மணித்தியால சிங்கள மொழித்தேர்ச்சி பயிற்சிநெறி கடந்த 5ஆம் திகதியிலிருந்து சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது.
எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பயிற்சிநெறியில் 100 அதிபர்கள் கலந்துகொள்கின்றனர்.



இதனை சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகமும் சம்மாந்துறை அதிபர்சேவை சங்கமும் இணைந்து நிலாட் (NILAT) நிறுவன அனுசரணையுடன் நடைமுறைப்படுத்திவருகின்றனர்.

பயிற்சி நெறியின் இணைப்பாளர் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.வி.அகமட் கியாஸ் தலைமையில் நடைபெற்றுவரும் இப்பயிற்சிநெறியில் பொத்துவில் தொடக்கம் வாழைச்சேனை வரையுள்ள 100 அதிபர்கள் கலந்துகொள்கின்றனர் என அதிபர்சங்கத்தலைவர் எச்எம்.அன்வர்அலி தெரிவித்தார்.

நிலாட் (NILAT)நிறுவன வளவாளர்களான என்.எம்.எம்.புவாட் எ.எம்.எம்.முஜிப் கே.பி.பிரதீப் எவ்.யேசுராஜா ஆர்.சிறிஸ்கந்தராஜா ஆகியோர் பயிற்சி வழங்கிவருகின்றனர்.

அதிபர்சங்கச் செயலாளர் எம்.ஜ.மாஹிர் பயிற்சிநெறியை நெறிப்படுத்தி வருகின்றார். எதிர்வரும் 16ஆம் திகதி சான்றிதழ்வழங்கும் இறுதிநிகழ்வு நடைபெறும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -