நீர்கொழும்பு, பெரியமுள்ள அலபார பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவந்த கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கட்டிடத்தின் ஒரு கொங்கிரீட் தட்டு இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது 3 பேர் அதில் சிக்குண்டுள்ளதுடன் அவர்களில் இருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எனவும் இதற்கான அம்பியுலன்ஸ் வண்டிகள் மற்றும் மீட்புப் பணிகளுக்கான வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.