கிழக்கு முதலமைச்சரின் கொள்கையை வலுப்படுத்தும் விதமாக மேலும் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள்




பெண்களை வௌிநாட்டுக்கு அனுப்பக் கூடாது என்ற கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கொள்கையை வலுப்படுத்தும் விதமான ஆடைத் தொழிற்சாலைகள் நிறுவும் திட்டத்திற்கமையை இரண்டு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன,

கடந்த சனிக்கிழமை ஏறாவூர் நகரில் ஆடைத் தொழிற்சாலையொன்றும் நெசவுத் தொழிற்சாலையொன்றும் திறந்து வைகக்ப்பட்டன,

இன மத பாகுபாடின்றி தமிழ் முஸ்லிம் யுவதிகள் இந்த ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்,

குறித்த ஆடைத் தொழிற்சாலையினை ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த தனவந்தரான அஷ்ஷெய்க் லூர்த்தாவின் புதல்வர்கள் திறந்து வைத்தனர்.

கிழக்கில் உள்ள பெண்கள் வௌிநாடுகளுக்குச் சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதை கண்டு அதற்கு மாற்று வழியாக கிழக்கு மாகாணத்திலேயே அவர்களுக்கு தொழில்வாய்யபுக்களை வழங்கும் விதமாக கிழக்கு மாகாண முதலமைச்சரால் ஆடைத்தொழிற்சாலைகள் நிறுவும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் ஏறாவூரில் ஏற்கனவே ஆடைத்தொழிற்சாலையொன்று நிறுவப்பட்ட நிலையில் சம்மாந்துறை மற்றும் சம்பூர் சீதனவௌியிலும் ஆடைத் தொழிற்சாலைகள் நிர்மாணி்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் கைகோர்த்து இந்த ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -