கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியினால் நிர்மாணிக்கப்படவுள்ள ஏறாவூர் சுற்றுலா தகவல் மையத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு 20.08.2015 அன்று இடம்பெற்றது.
இதன்போது சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம்.சுகாதாரப் பிரதியமைச்சர் பைசல் காசிம் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நசீர்,விவசாயத் துறை அமைச்சர் க.துரைராஜசிங்கம்,மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
அத்துடன் கிழக்கு மாகாண சுற்றுலாத் துறை பணியக அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சுற்றுலாத் துறைப் பணியகம் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.