சட்டவிரோத மரங்கள் பிடிப்பட்டணா..!

அனா-
ட்டவிரோத மரங்களை ஏற்றி வந்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் திங்கள் கிழமை (28.08.2017) அதிகாலை விழுந்துள்ளதாக வாழைச்சேனை வனஇலகா வட்டார அதிகாரி எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்

செங்கலடி மணலாறு பகுதியில் இருந்து சட்டவிரோத மரங்களை கிரான் பகுதியினூடாக ஓட்டமாவடிக்கு கொண்டு வரும் வழியில் புலியாந்தகல் பகுதியில் வைத்து வாழைச்சேனை வனஇலகா அதிகாரிகள் கைது செய்வதற்காக துரத்தும் போது அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வேகமாக வந்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் விழுந்துள்ளது.

பத்து அடி தொடக்கம் பன்னிரண்டு அடி நீளம் கொண்ட முப்பதுக்கு மேற்பட்ட தேக்கு மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இப்பகுதியில் சட்டவிரோத மரம் வெட்டும் பணி இடம்பெறுவதால் வனஇலகா அதிகாரிகள் இப்பகுதியில் கடமையில் ஈடுபடுவதாகவும் வாழைச்சேனை வனஇலகா வட்டார அதிகாரி எஸ்.தனிகாசலம் மேலும் தெரிவித்தார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -