க.கிஷாந்தன்-
Race For Education திட்டத்தில் 2016ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் மத்திய மாகாணத்தில் கணித பாடத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள வழிக்காட்டிய பாடசாலை ஆசிரியர்களையும், அதிபர்களையும் மற்றும் கல்வி அதிகாரிகளையும் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் அட்டன் சீடா வள நிலையத்தில் நடைபெற்றது.
மத்திய மகாணத்தின் தமிழ் மொழி மூல மாணவர்களின் க.பொ.த சாதாரண தரத்தில் கணித சித்தியை உயர்த்தும் நோக்கில் யாழ். இந்து கல்லூரியின் 1992ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் முன்னெடுத்து வரும் இந்த Race For Education திட்டத்தின் மத்திய மாகாண இணைப்பாளர் பொன்னம்பலம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எ.சத்தியேந்திரா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.