இலங்கை - இந்தோனேசியா நாடுகளுக்கிடையே சமூக நீர் வழங்கல்

லங்கை - இந்தோனேசியா நாடுகளுக்கிடையே சமூக நீர் வழங்கல் மற்றும் பொது சுகாதார வசதிகள் முதலான துறைகளில் அறிவு மற்றும் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர் வழங்கல் திணைக்களத்தின், நீர் வழங்கல் கருத்திட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர் 08ஆம் திகதி சனிக்கிழமை இந்தோனேசிய தலைநகர் ஜஹர்த்தா
நோக்கி புறப்படவுள்ளனர்.


உலக வங்கியின் அனுசரணையில் நடாத்தப்படும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் அதிகாரிகளுக்கு விமானப் பயணச்சீட்டு வழங்கும் நிகழ்வு இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதின்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் மற்றும் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான ஆகியோரும்; கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -