எச்.எம்.எம்.பர்ஸான்-
ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா மற்றும் தலைமையக முகாமையாளர் எம்.எல்.ஏ. மஜீத் அவர்களினதும் வழிகாட்டலில் சமூர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துற்குட்பட்ட காவத்தமுனை அல் - அமீன் வித்தியாலய மாணவர்கள் மத்தியில் மது மற்றும் புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு 2017.07.21 ந் திகதி மாபெரும் கருத்தரங்கு ஓட்டமாவடி பிரதேச செயலக சமூக அபிவிருத்தி உதவியாளர் எம்.என்.எம். சாஜஹான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் இறுதியில் மாணவர்கள் தனது வாழ்நாளில் ஒருபோதும் மது மற்றும் புகைத்தல் பாவனையில் ஈடுபடமாட்டோம் என அதிகாரிகளின் முன்நிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்ததுடன் தங்களுடைய கையொப்பங்களையும் இட்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஏ.ஜீ பிர்தவ்ஸ் அவர்களும் உப அதிபர்கள், ஆசிரியர்கள்,பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஏ. ரிஸ்வி தாசிம், சமுதாயம்சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.ரியால் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.