யானையின் தாக்குதலுக்கு உள்ளான றிபாஸ் அதிதீவிர சிகிச்சை பிரிவில்

அப்துல்சலாம் யாசீம்-

புல்மோட்டை- ஜின்னாபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் நேற்றிரவு (05) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் அதே இடத்தைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜமீல் றிபாஸ் (38வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் நெல் மூட்டையை கொண்டு சென்ற போது வீதியருகில் நின்ற யானை துரத்தி வந்து தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவரின் உறவினரொருவர் தெரிவித்தார்.

இதேவேளை காட்டு யானைகளின் தொல்லை குறித்து வனப்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும் எதுவித நடவடிக் கைகள் எடுக்க வில்லையெனவும் பிரதேச மக்கள் விஷயம் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -