புல்மோட்டை- ஜின்னாபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் நேற்றிரவு (05) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர் அதே இடத்தைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜமீல் றிபாஸ் (38வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் நெல் மூட்டையை கொண்டு சென்ற போது வீதியருகில் நின்ற யானை துரத்தி வந்து தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவரின் உறவினரொருவர் தெரிவித்தார்.
இதேவேளை காட்டு யானைகளின் தொல்லை குறித்து வனப்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும் எதுவித நடவடிக் கைகள் எடுக்க வில்லையெனவும் பிரதேச மக்கள் விஷயம் தெரிவிக்கின்றனர்.