ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தேர்தல் முறையின்கீழ் இந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படுமெனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லை நிர்ணய அறிக்கையின்படி 5092 தேர்தல் தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவதுடன், மேலும் 30 சதவீதமான பிரதிநிதிகள் விகிதாசார அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவர். உள்ளூராட்சி சபைகளில் தற்போது நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இருக்கின்றனர். புதிய தேர்தல் முறைப்படி இந்த எண்ணிக்கை எட்டாயிரமாக அதிகரிக்கும்.
இருந்தும் இந்த எண்ணிக்கையை 7000 ஆக குறைக்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் 25 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -