80 ஆயி­ரத்தை தாண்­டி­ய டெங்கு நோயாளர்கள் -அதிர்சித் தகவல் வெளியிட்ட நிபுணர்கள்


நாட்டில் வேக­மாக பர­வி­வரும் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்டோர் எண்­ணிக்கை 80 ஆயி­ரத்தை தாண்­டி­யுள்­ளது. அதன்­படி டெங்கு சிகிச்சை நட­வ­டிக்­கை­க­ளுக்­காக விசேட வைத்­திய நிபு­ணர்கள் உள்­ளிட்ட 250 இற்கும் அதி­க­மான வைத்­தி­யர்­களை நாடு­பூ­ரா­கவும் கட­மையில் ஈடு­ப­டுத்­தி­யுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஆண்டின் அதி­கூ­டிய நோயா­ளர்கள் எண்­ணிக்கை பதி­வாகிய ஆண்­டாக இந்த ஆண்டு கரு­தப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் டெங்கு நோயை கட்­டுப்­ப­டுத்த சகல விதங்களிலும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரும் நிலையில் பொது­மக்கள் தமது சூழலை சுத்­த­மாக வைத்­தி­ருக்க தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தியும் வரு­கின்­றது.

நாட்டில் டெங்கு பரவல் அதி­க­ரித்­து­வரும் நிலையில் சுகா­தார அமைச்சு மற்றும் அரச நிறு­வ­னங்­களை இணைத்­துக்­கொண்டு அர­சாங்கம் விரை­வான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தாக குறிப்­பிட்­டுள்­ளது.

குறிப்­பாக நீர்­கொ­ழும்பு, தலங்­கம, வேதர, பாணந்­துறை மற்றும் ஐ.டி.எச். ஆகிய வைத்­தி­ய­சா­லை­களில் டெங்கு சிசிச்­சைக்­கான விசேட பிரி­வுகள் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளன. அதேபோல் டெங்கு பரவல் கார­ண­மாக நாளாந்தம் தேசிய வைத்­தி­ய­சா­லையை நாடும் நோயா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்துச் செல்­வதன் கார­ண­மாக டெங்கு சிகிச்­சைக்­கான விசேட பிரி­வு­களை ஸ்தாபிக்க அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இதே­வேளை டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலவும் பகு­தி­களில் நுளம்புப் பெருக்கம் தொடர்­பி­லான அறிக்­கை­களை பெற்றுக் கொள்­வ­தற்கும் சுகா­தார அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது. அந்­த­வ­கையில் நுளம்பு குடம்­பிகள் தொடர்­பி­லான ஆராய்ச்சி உத்­தி­யோ­கத்­தர்­களை ஈடு­ப­டுத்­தி­யுள்­ள­தாக அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

பாட­சா­லைகள், வேலைத்­த­லங்கள், மதஸ்­த­லங்கள் மற்றும் ஏனைய நிறு­வன வளா­கங்­களில் 60 வீத­மான நுளம்பு பெருக்கம் பதி­வா­கி­யுள்­ளது. எஞ்­சிய 40 வீத­மான நுளம்புப் பெருக்கம் குடி­யி­ருப்­புக்­களை அண்­மித்துக் காணப்­ப­டு­வ­தா­கவும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும் டெங்கு பர­வலை கட்­டுப்­ப­டுத்தும் மருந்து வகை­களை கியூபா மற்றும் ஜெர்­மனி ஆகிய நாடு­களில் இருந்து பெற்­றுக்­கொள்ளும் நட­வ­டிக்­கைகள் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

டெங்கு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்ள நிலையில் டெங்கு சிகிச்­சை­க­ளுக்­காக பயன்படுத்தும் டெக்ஸ்ட்ரன் சேலைன் வகையை தாய்லாந்திலிருந்து கொண்டுவருவதற்கும் சுகாதார அமை ச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக தாய் லாந்து அரசாங்கம் தமது விருப்பத்தை தெரிவி த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.(வீரகேசரி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -