31 வருடங்களின் பின்னர் அழிவடைந்த பொலிஸ் நிலையம் வெல்லாவெளியில் புதிதாக அமைக்கப்பட்டு திறந்து வைப்பு










ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

யுத்தத்தினால் அழிவடைந்திருந்த மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் நிலையம் 31 வருடங்களின் பின்பு சனிக்கிழமை (29.07.2017) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மாதிபர் யாகொட ஆராச்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் மாதிபர் பூஜித் ஜயசுந்தர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்தார்.

வெல்லாவெளியில் உள்ள பொலிஸ் நிலையம் கடந்த கால யுத்தத்தினால் அழிவடைந்திருந்தது.

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் ஒரு கோடி ரூபா நிதியில் கட்டிமுடிக்கப்பட்டு பழைய பொலிஸ் நிலையம் இருந்த அதே இடத்தில் தற்போதைய புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்டுள்ளது.

இப் பொலிஸ் நிலையத்தில் ஆயுத களஞ்சியம், பொறுப்பதிகாரி அலுவலகம், கடமை பொலிஸ் உத்தியோகஸ்தர் அலுவலகம், இரண்டு சிறைக்கூடங்கள், தொலைபேசி இயக்குனர் அலுவலகம், பொலிஸ் விடுதி அலுவலகம் உட்பட கட்டிடத்தொகுதி என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குள் 31 ஆயிரம் பொதுமக்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், பிரதியமைச்சர் எம்.எஸ்.எம். அமீரலி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கே. கருணாகரம், எம். நடராஜா, என். கிருஸ்ணப்பிள்ளை, பிரதி பொலிஸ் மாதிபர், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், மாவட்ட அரச அதிகாரிகள், மதப்பெரியார்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -