பைஸர் முஸ்தபாவின் அமைச்சு பறிபோகும் நிலை..?



மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடமிருந்து அவரது அமைச்சுப் பறிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றங்களின் வரிசையில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரையும் மாற்றவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருப்பதால், இத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகத் தற்பொழுது இருக்கும் மஹிந்த அமரவீரவுக்கு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வழங்கப்படவுள்ளதாகவும், பைஸர் முஸ்தபாவுக்கு மஹிந்த அமரவீரவின் அமைச்சு வழங்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இந்த அமைச்சர்களின் மாற்றம் இன்னும் சில நாட்களில் இடம்பெறவுள்ளதுடன், உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் தொடர்பிலான முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -