கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது,
இதன் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நசீர் ,கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஷிப்லி பாறூக்,எம் அன்வர்,அப்துர் ரஸ்ஸாக்,ஏ எல் தவம் ,எம் மாஹிர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினரான ஞானமுத்து கிருஷ்ணப்பிள்ளை மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் முழக்கம் மஜீத் ஆகி யோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்,
அத்துடன் சர்வமதத் தலைவர்கள்,மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட பல சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்திருந்திருந்தனர்,