கிழக்கு மாகாண முதலமைச்சர் மூதூர் சீதனவெளி ஆடைத்தொழிற்சாலைக்கு விஜயம்.!

கிழக்கு முதலமைச்சரின் எண்ணக்கருவுக்கமைய உருவாக்கப்பட்டு வரும் சீதனவௌி ஆடைத் தொழிற்சாலையை பார்வையிடுவதற்கு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சம்பூருக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதனபோது சம்பூரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் ஆராய்ந்தார்,

கிழக்கு முதலமைச்சரின் இந்த பயணத்தின் போது கிழக்கு முதலமைச்சின் செயலாளர் யூஎல்ஏ அசீஸும் இணைந்து கொண்டார்,

கிழக்கிலிருந்து பெண்கள் வௌிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதை நிறுத்த வேண்டும் என்ற கிழக்கு முதலமைச்சரின் கொள்கைக்கு அமைவாக கிழக்கில் ஆடைத் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கும் திட்டத்தை கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் முன்னெடுத்து வருகின்றார்,

கிழக்கின் அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் மையப்படுத்தி ஆடைத் தொழிற்சாலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன் முதற்கட்டமாக ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலையில் தற்போது பல இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்புக்களை பெற்றுள்ளதுடன் சம்மாந்துறை மற்றும் சீதனவௌி பகுதிகளில் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் இந்தத் திட்டம் கிழக்கின் மேலும் பல பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -