அப்துல்சலாம் யாசீம்-
தகாத முறையில் 13 வயது சிறுமிக்கு ஆணுறுப்பை காட்டிய இளைஞனை இம்மாதம் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (17) கன்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளவர் கன்தளாய். முள்ளிப்பொத்தானை பகுதியைச்சேர்ந்த 26வயது இளைஞன் எனவும் தெரியவருகின்றது.
கல்மெடியாவ.99ம் கட்டை பகுதியைச்சேர்ந்த 13 வயது மாணவி பாடசாலைக்கு சென்று வீட்டுக்கு வரும் போது தான் அணிந்திருந்த சாரத்தை கலட்டி தன்னுடைய ஆணுறுப்பை காட்டியதாக மாணவி நேற்று தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் அம்முறைப்பாட்டையடுத்து இவர் கைது செய்யப்பட்டதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
