புரிந்தும் புரியாமல் நடந்து கொள்வது ஏன்..?

ரசியல் ஞானியாக வலம் வந்து கொண்டிருக்கும் அம்பாறை மாவட்டத்தின் அரசியல் முதிர்ச்சி முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அமைச்சராக இருந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்திற்கு பிரதேசவாதங்கள் இல்லாமல் செய்த அபிவிருத்தி செயற்பாடுகளை நினைவு கூற வேண்டும். அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கான அபிவிருத்தி நோக்கிய அரசியல் பயணம் மறைந்த அரசியல் தலைவர் அஷ்ரப்பிற்கு பிறகு முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவிடமே இருக்கிறது.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவினால் அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைப்பதற்கென வேறு குழுக்களை அழைத்து வரும் நிர்வாகிகளுக்கு மனம் உறுத்தவில்லையா?அதாஉல்லா அடிக்கல் நடும் போது அருகில் இருந்து புகைப்படங்களை எடுத்துவிட்டு கட்டிடங்களை திறக்க வேறு ஒருவரை நாடுவது தவறு என புரிந்தும் புரியாததை போல் நடந்து கொள்வதன் மாயம் தான் என்ன?

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் முன்னாள் அமைச்சரின் அபிவிருத்திகளும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளும் பகிர்ந்தளிக்கப்பட்டதை போல் வேறு எந்த அரசியல் கட்சியினாலோ அல்லது அரசியல்வாதியினாலோ பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதை மக்கள் அனுபவத்தின் மூலம் புரிந்து கொண்டுள்ளனர். தேர்தல் காலங்களில் வாக்கு வேட்டையை மட்டும் முழு நோக்காக கொண்டு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் வந்து செல்லும் ஒரு சுற்றுலா இடமாக அம்பாறை மாவட்டம் மாறி இருக்கிறது.

அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி பெருவிழா என பெயரை வைத்துக் கொண்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் கட்டிட திறப்பு விழாக்கள் நடைபெற்று வருகின்றன.புதிதாக திறந்து வைக்கப்பட்ட இந்த கட்டிடங்களின் அடிக்கல் நடு விழாக்களை செய்தவர் யார்? என்பது தெரிந்தும் சிலர் தங்களது சுயநல நோக்கங்களுக்காக உண்மை தன்மையை முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதை போல் மறைத்து விட்டு கற்பனை வாதங்களை பேசுகின்றனர்

கட்சிகள் மேல் தனிநபர்கள் கொண்டுள்ள விசுவாசத் தன்மை வரவேற்க கூடிய பண்பாக இருந்தாலும் மனச்சாட்சிக்கு புறம்பாக ஒரு நாளும் நடந்துவிடக் கூடாது.எமது சமூகத்தில் உள்ள குணப்படுத்த முடியாத நோய் நன்றி மறத்தலாகும்.இந்த நோய் முற்றியவர்களே முன்னாள் அமைச்சர் அதாஉல்லா செய்த அபிவிருத்தி திட்டங்களை நினைவு கூற மறுத்துநிற்கின்றனர். அதாஉல்லா செய்த அபிவிருத்திகளை மறந்து விட்டாலும் பராவாயில்லை அவரை தூற்றும் மட்டமான செயலையாவது மனச்சாட்சிகளை முன்னிறுத்தி தங்களுக்குள்ளே கேள்விகளை கேட்டு நாம் செய்வது சரியா? பிழையா?என்ற தீர்மானத்தை எடுத்து இனிமேலாவது நிறுத்திக் கொள்ள முயற்சி செய்வோம்.
ஜெம்சித் (ஏ) றகுமான்,
மருதமுனை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -