காஷ்மீர், பலஸ்தீன் சிறு­வர்­களின் நிலை மிக மோசமாகியுள்ளது - அக்குறனை மாணவி UNயில் உரை

ந்திய அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களால் காஷ்மீர் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அத்­துடன் காஷ்மீர் மற்றும் பலஸ்தீன் சிறு­வர்­களின் நிலை அங்கு மேற்­கொள்­ளப்­படும் ஆக்­கி­ர­மிப்­பு­க­ளினால் மிகவும் மோச­ம­டைந்­தி­ருப்­ப­தாக அக்­கு­றணை மாணவி ஷாமா முயீஸ் ஐக்­கிய நாடுகள் உப­மா­நாட்டில் ஆற்­றிய உரை­யின்­போது தெரி­வித்தார்.

அக்­கு­ற­ணையை பிறப்­பி­ட­மா­கவும், பிரான்ஸ் College Saint Exupery யில் கல்வி கற்று வரும் ஷாமா முயிஸ் ஜெனீ­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபையில் 34 ஆவது மனித உரிமை மாநாட்டு அமர்வில் பெண்கள் மற்றும் சிறு­வர்கள் உரி­மைகள் பாது­காப்பு அமைப்பின் ஏற்­பாட்டில் கடந்த 17 ஆம் திகதி நடை­பெற்ற கருத்து சுதந்­திரம் மற்றும் ஒன்று கூடும் உரிமை உப மாநாட்டில் உரை­யாற்­றினார்.

அவர் அங்கு ஆற்­றிய உரையை தமிழில் தரு­கின்றோம்.2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆந் திகதி இந்­தியப் படை­யி­னரால் கப்­வாறாப் பகு­தியில் வைத்து காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மாக சுட்டுக் கொல்­லப்­பட்ட ஐந்து வய­தான கின்ஸா மற்றும் 14 வய­தான அமீன் ஆகி­யோரின் கொலை­களை கண்­டித்துக் கொண்டு எனது உரை­யினை ஆரம்பம் செய்­கின்றேன். 

ஜம்மு காஷ்மீர் ஆள்­புலப் பிர­தே­சத்தை இந்­தியப் படை­யினர் ஆக்­கி­ர­மித்­த­தி­லி­ருந்து மனித உரிமை மீறல்கள் அந்த மாநி­லத்தில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த அடக்­கு­முறை சட்­டத்­திற்கு புறம்­பான கொலைகள், வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டுதல், சித்­தி­ர­வதை, பாலியல் வன்­பு­ணர்வு, இடை­யூறு மற்றும் முறை­யற்ற விதத்தில் தடுத்­து­வைத்தல் போன்ற மனித உரி­மைகள் துஷ்­பி­ர­யோகம் போன்­ற­வற்றால் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

கடந்த ஆண்­டு­களைப் போலவே 2016 ஆம் ஆண்டு புற­ந­டை­யான வன்­மு­றைகள் தொட­ராக நடை­பெற்ற ஆண்­டாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இரா­ணு­வ­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட அடக்­கு­முறை, ஆயுதப் படை­யி­ன­ருக்கு மறை­முக அனு­மதி வழங்­கப்­பட்டு அர­சாங்க ஆத­ர­வு­ட­னான பாகு­பாடு காட்டும் வன்­மு­றைகள், அதி­க­ரித்த மனித உரிமை மீறல்கள், சட்­டத்­திற்குப் புறம்­பான கொலைகள், காயப்­ப­டுத்­தல்கள், சட்­ட­வி­ரோத தடுத்­து­வைப்­புக்கள், சித்­தி­ர­வதை, பாலியல் வன்­செ­யல்கள், காணா­ம­லாக்­கப்­ப­டுதல், எரி­யூட்­டல்கள் மற்றும் பொது­மக்கள் சொத்­துக்­களை அழித்தல், சமயக் கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்கு ஒன்­று­கூ­டு­வதைத் தடுக்கும் கட்­டுப்­பா­டுகள், ஊட­கங்­க­ளுக்கு போடப்­படும் வாய்ப்­பூட்டு, தொடர்­பாடல் மற்றும் இணை­யத்­தள செயற்­பா­டு­களில் உரிமை மீறல்­க­ள் போன்றவற்றைக் குறிப்­பி­டலாம்.

இந்­தியப் படை­யி­னரால் பயன்­ப­டுத்­தப்­படும் உருண்டைத் துப்­பாக்­கி­களால் சுடப்­பட்டு பெரும் எண்­ணிக்­கை­யி­லான காஷ்மீர் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர், கண்­பார்­வை­யினை இழந்­துள்­ளனர் மற்றும் உட­லி­யக்கம் இல்­லாத நிலைக்கும் ஆளா­கி­யுள்­ளனர். உருண்டைத் துப்­பாக்கி ரவை­யொன்­றினுள் 500 வரை­யான சன்­னங்­களைக் கொண்­டி­ருக்கும். குறித்த ரவை வெடிக்­கும்­போது அதனுள் இருக்கும் சன்­னங்கள் அனைத்து திசை­க­ளிலும் சித­று­கின்­றன.

இந்த உலோகச் சன்­னங்கள் ஆறு சதுர அடி வடிவில் 60 யார் வரை­யான தொலைவு வீச்­செல்லை வரை அகப்­படும் அனை­வ­ரையும் அது தாக்கும். துப்­பாக்கி ரவை­களை விட இது குறை­வான பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­னாலும் கண்­க­ளில்­ப­டு­மானால் பார­தூ­ர­மான காயங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. அதே­போன்று பலஸ்­தீ­னத்தில் சிறுவர் பரா­யத்­தினர் தடுத்து வைக்­கப்­படும் தக­வல்கள் பற்­றியும் தங்­க­ளது கவ­னத்­திற்குக் கொண்­டு­வர விரும்­பு­கின்றேன். 

சிறுவர் பிர­க­ட­னத்தின் உறுப்­புரை 1 சர்­வ­தேச சட்­டத்தின் பிர­காரம் 18 வய­துக்குக் கீழ்ப்பட்­ட­வர்­களை சிறு­வர்­க­ளாகக் கரு­து­கின்­றது. 
2000 ஆம் ஆண்டு தொடக்கம் செப்­டம்பர் 2015 வரை இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்புப் படை­யினர் 8500 பலஸ்­தீனச் சிறு­வர்­களைக் கைது செய்து சிறைத் தண்­டனை விதித்­துள்­ளனர். கற்­களை வீசி­ய­தாக அவர்கள் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. 

உலக நாடு­களில் சிறு­வர்­க­ளுக்கு இரா­ணுவ நீதி­மன்­றத்தில் தண்­டனை விதிக்கும் ஒரே­யொரு நாடு இஸ்­ரே­லாகும். இவ்­வா­றான நீதி­மன்றங்­க­ளினால் வரு­டாந்தம் 500 தெடக்கம் 700 பலஸ்­தீனச் சிறு­வர்கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­டு­கின்­றனர். இவ்­வா­றான சிறுவர் கைதிகள் பெரிய கைதிகள் போலவே கணிக்­கப்­ப­டு­கின்­றனர். அவர்கள் கடு­மை­யான சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­றனர்,

அநீ­தி­யான முறையில் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர், மனி­தா­பி­மா­ன­மற்ற முறையில் நடத்­தப்­ப­டு­கின்­றனர். இது அவர்­க­ளது எதிர்­கா­லத்தை அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்கி அடிப்­படை உரி­மை­களை மீறு­வ­தோடு சர்­வ­தேச சட்­டங்கள் விதி­மு­றைகள் மற்றும் சிறுவர் பிர­க­டனத்­தையும் மீறு­ப­வை­யாக உள்­ளன. 

பலஸ்­தீன சிறுவர் கைதி­களின் நிலை எண்ணிக்கையில் 
* 762 சிறுவர் கைதிகள் ஜெரூ­ஸ­லத்தைச் சேர்ந்­த­வர்கள்
* 7 சிறு­வர்கள் அர­சியல் கைதி­க­ளாக உள்­ளனர்.
* 443 சிறு­வர்­க­ளுக்கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 
* 2015 ஒக்­டேபர் 1 ஆம் திக­திக்கும் 2016 பெப்­ர­வரி மாதம் 28 ஆம் திக­திக்கும் இடையே 1000 சிறுவர் கைதிகள் 
* 2179 சிறு­வர்கள் 2015 ஆம் ஆண்­டின்­போது தடுத்­து­வைப்பு சிறைச்­சா­லை­களில் சிறு­வர்­கள்­ மீது பிர­யோ­கிக்­கப்­படும் மிகக் குரூ­ர­மான

அணு­கு­மு­றைகள்; 
1. விசா­ர­ணை­யின்­போது கடு­மை­யாக தாக்­கப்­ப­டு­தலும் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாக்­கு­தலும்
2. கைதின்­போது மோப்ப நாய்­களைக் கொண்­டு­வ­ருதல்.
3. மனிதக் கேட­யங்­க­ளாக அவர்­களைப் பயன்­ப­டுத்தல்.
4. காய­ம­டைந்த சிறு­வர்­களை அவர்­க­ளது மோசமான உடல் நிலையினையும் கருத்திற்கொள்ளாது விசாரணை நிலையங்களுக்கு மாற்றுதல்.
5. தனிமைச் சிறையில் அடைப்பதோடு குடும்பத்தினர் மற்றும் சட்டத்தரணிகளுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியாதவாறு தடுத்தல். 
6. நோயுற்ற சிறுவர் கைதிகளை வைத்தியசாலையில் அவர்களது கட்டிலுடன் சேர்த்து கைவிலங்கிடுதல் 

உள்ளிட்ட விடயங்களை ஷாமா முயீஸ் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.ஷாமா முயீஸ் முன்னாள் அக்குறணை பிரதேச சபை உறுப்பினர் வஹாப்தீன் (வஹாப் மாஸ்டர்) மற்றும் அக்குறணையின் பிரபல சமூக சேவையாளர் மவ்ஜூத்தின் பேத்தியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -