எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் விடுதலை செய்யப்பட்டார்

போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 850 பேரை, தனது பாதுகாப்பு படைகளை கொண்டு படுகொலைசெய்த குற்றத்திற்காக, ஹொஸ்னி முபாரக் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் பின்னர் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டு இராணுவ தடுப்பில் வைக்கப்பட்டார்.

மேலும் 80 வயதாகவும் ஹொஸ்னி முபாரக் சுமார் 30 வருடகாலம் எகிப்தை ஆட்சி செய்துள்ளார். இந்நிலையில் அரபி வசந்த புரட்சியின் மூலம் அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதோடு, படுகொலைகள் மற்றும் ஊழல் குற்றத்திற்காக ஹொஸ்னி முபாரக் மற்றும் அவரது இரண்டு மகன்மார் என்போர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மகன்மார் இருவரும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்படவே, கய்ரோவிலுள்ள இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முபாரக், நோய்வாய் பட்டநிலையில் கடந்தாண்டு மேன்முறையீடு செய்திருந்தார்.

குறித்த மனுவை விசாரித்துள்ள கெய்ரோ இராணுவ நீதிமன்றம் ஹொஸ்னி முபாரக்கின் உடல்நிலை என்பவற்றை கருத்திற்கொண்டு, அவரை விடுதலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -