இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் விளம்பரப் பலகை சேதம்..!

க.கிஷாந்தன்-
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை சந்தியில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவளார்களின் விளம்பர பலகை ஒன்று இனந்தெரியாதவர்களால் 30.03.2017 அன்று இரவு கிழிக்கப்பட்டுள்ளதாக குறித்த இடத்திற்கு பொறுப்பான பத்தனை பொலிஸ் நிலையத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு கிழிக்கப்பட்ட விளம்பர பலகையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம், மற்றும் ஆதரவாளர்களினதும் உருவப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

எனவே இது தொடர்பில் விஷமிகளை கண்டறியும் நடவடிக்கையை பொலிஸார் கவனம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -