யாழ். அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்..!

பாறுக் ஷிஹான்-
ச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜே.ஏ.எஸ்.என்.கே.ஜயசிங்க களுத்துறை இலங்கை பொலிஸ் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவருடன் இணைந்ததாக 3 பொலிஸ் அதிகாரிகளுக்கும் இவ்வாறாக வேறு இடங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு பொலிஸ் பரிசோதகர் ஆக இருந்த ஜே.ஏ.எஸ்.என்.கே.ஜயசிங்க அச்சுவேலி பொறுப்பதிகாரியாகக் கடமைக்கு அமர்த்தப்பட்ட பின்னர் பொலிஸ்மா அதிபரினால் அண்மையில் பிரதம பொலிஸ் பரிசோதகராகப் பதவி உயர்வு பெற்றிருந்தார்.

இந்நிலையில் அச்சுவேலி பகுதியில் நான்கு வருடகாலமாகப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய இந்நிலையில் அவருக்கு களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -