நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிடம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த காரணத்திற்காகவே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா,சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பில் ஹிருணிகா,பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
துமிந்தவின் சிறைச்சாலை சிகிச்சை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிருணிகா பிரேமசந்திர கோரிக்கை விடுத்திருந்தார்.
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில உள்ள 17 வைத்தியர்களில் 10 பேர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.