மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கான கணணி உபகரணம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (03.02) பிற்பகல் சிறுவர் பராமரிப்பு நிலைய தலைவர் ஏ.எம்.எம்.அலியார் (சமூகசேவைகள் உத்தியோகத்தர்) தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின்போது பாரளுமன்ற உறுப்பினர் அவர்களினால் நிலையத்திற்கான கணணி உபகரணம் முகாமையாளர் எஸ்.எம். சின்னலெப்பை அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன்; கிழக்கு மாகாணத்தில் குறைபாடாக இருக்கின்ற முஸ்லிம் சிறுமிகளுக்கான தனியான பராமரிப்பு நிலையம் இல்லாத குiறியினை நிவர்த்திக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் முயற்சியில் மிக விரைவில் ஏறாவூரில் அமையப்பெறவுள்ள புதிய நிலையத்திற்கான முன்னேற்ற நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.