மறிச்சுக்கட்டிப்பாதையை மூடுமாறு கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!

அஸீம் கிலாப்தீன்-
ன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்திற்குச் செல்லும் மறிச்சுக்கட்டி – இலவங்குளப்பாதையை மூடுமாறு கோரி அரச சார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று தாக்கல் செய்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்திற்குச் செல்லும் மறிச்சுக்கட்டி – இலவங்குளப்பாதையை மூடுமாறு கோரி கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் அரச சார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று வழக்கு தாக்கல் செய்தது.

இந்தப் பாதை திறக்கப்படுவதால் குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுமென்றும் இது நெடுஞ்சாலைப் பாதையெனவும் கூறியே சூழலியல் நிறுவனமொன்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முன்னிலையாகியிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகவியலாளருக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்கள் பயன்படுத்தும் இந்தப்பாதையை மூட வேண்டுமெனவும் அதனை செப்பனிடக்கூடாதெனவும் கூறுவது நியாயமானது அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -