கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு 7ம் வட்டார பாதிக்கப்பட்ட மக்கள் இரானுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட தமது பாரம்பரிய காணிகளை விடுவித்துத்தரக் கோரி கடந்த ஒரு வார காலமாக தொடர் உண்ணாவிரத போரராட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை கடந்த 5ம் திகதி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கே.காதர் மஸ்தான் அவர்கள் அவ்விடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது பாதிக்கப்பட்ட மக்களால் கையளிக்கப்பட்டிருந்த கோரிக்கைகள் தொடர்பாக நேற்று (08-02-2017 – புதன்கிழமை) அதிமேதகு ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் விரைவில் இம்மக்களுக்கு சொந்தமான பாரம்பரிய காணிகளை விடுவித்துத்தருவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பணித்துள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.