அம்பாறை மாவட்ட சுதந்திரதின நிகழ்வில் அமைச்சர் தயாகமகே.!

காரைதீவு நிருபர் சகா-
லங்கையின் 69வது சுதந்திர தினத்தையொட்டி அம்பாறை மாவட்ட பிரதான வைபவம் நாளை அம்பாறையில் அம்பாறை அரச அதிபர் துசித பி.வணிகசேகர தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக அமைச்சர் தயாகமகே கலந்து சிறப்பிக்கவிருக்கின்றார். அதேவேளை ஏனைய அரசியல்பிரமுகர்களும் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை நகரின் மணிக்கூட்டுச்சந்தியிலிருந்து மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் முப்படையினரின் ஊர்வலம் மூவின பாடசாலைகளின் பாண்ட் வாத்திய ஊர்வலம் சகிதம் அதிதிகள் வரவேற்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பிரதான நிகழ்வுத்திடலில் தேசியக்கொடி ஏற்றும் வைபவம் நடைபெறும்.

அங்கு மூவின மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது. சுதந்திர தின உரைகளும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -