பஷீர் சேகுதாவுத் மு.கா தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார். அது சில நேரம் சாதகமாக முடிந்தால் தலைமைத்துவ இடைவெளி ஏற்படும் அதனை நிபர்த்திக்க தலைமைத்துவம் ஒன்றை தேடுகின்ற போது கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்கான முன் கூட்டிய செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிற்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலையை பூதாரமாக்கி தலைமைத்துவத்தை வெளியேற்றுவதன் மூலம் மு.காவினை நலிவடைய செய்து தன் கட்சியினை மக்களிடையே வேரூன்ற வைக்க வேண்டும் என்ற இராண்டாவது செயற்பாட்டையும் இன்னும் சிலரையும் வைத்து தூண்டிவிட்டிருக்கிறார். மு.கா வினை அழித்து விட வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு மு.கா வின் தலைவரும் உயர் பீட உறுப்பினர்களும் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். தலைவர் அஷ்ரஃப் இன் பல தியாகங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுக்கபட்ட கட்சியை சுயநல அரசியலை முன்னெடுப்போர் சூரையாடி செல்லும் அளவு நலிவடைந்தவர்ளாக இருந்து விடக் கூடாது.
மு.கா விற்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலை சுமூகமான தீர்வினை எட்டி ஆலமரமாய் ஆயிரம் விழுதுகளுடன் வாழ வேண்டும்.
கிழக்கான் அஹமட் மன்சில்-