கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் கொடியேற்றவிழா ஆரம்பம் (படங்கள்)

யு.எல்.எம். றியாஸ்-
ல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் வருடாந்த கொடியேற்றவிழா நேற்று ஆரம்பமானது. (27.02.2017) கல்முனை கடற்கரைப் பள்ளி வாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் 195வது வருடாந்த கொடியேற்ற விழா நேற்று அஸர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமானது. 

கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் டாகடர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் கொடியேற்ற வைபவம் இடம்பெற்றது.  வருடம் தோறும் ஜமாதுல் ஆகிர் பிறை ஒன்று முதல் பிறை பனிரெண்டு வரை இக் கொடியேற்ற விழா நடைபெறும் 

12 நாட்கள் இடம்பெறும் இவ் விழாவில் பக்கீர் ஜமாத்தினரின் ராத்திபுக்கள்,உலமாக்கள் மார்க்க அறிஞ்சர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள் இடம்பெற உள்ளன. இவ் விழாவில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை பிரதேச செயலாளர் முஹம்மட் கனி , பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ,உலமாக்கள் மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவிலானவர்கள் கலந்துகொண்டனர். 

கொடி இறக்கும் தினமாகிய எதிர்வரும் 11ம் திகதி சனிக்கிழமை லுஹர் தொழுகையை தொடர்ந்து மாபெரும் கந்தூரி வழங்கப்பட்டு நிறைவடைய உள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -