அட்டன் விபத்தில் பெண் ஒருவர் பலி

க.கிஷாந்தன்-

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் 24.01.2017 அன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 57 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்றில் குறித்த பெண் மோதுண்டதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இடத்தில் விபத்துக்குள்ளான பெண் வீதியின் ஓரத்தில் பயணித்த வேளையில் வழியில் சென்ற வேன் குறித்த பெண்ணின் மீது மோதுண்டு விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பலத்த காயங்களுடன் பிரதேசவாசிகளால் இப்பெண்ணை வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுகையில் வழியில் இவர் உயிர் பிரிந்துள்ளது.  இவ்வாறு உயிரிழந்தவர் அட்டன் – செனன் பகுதியை சேர்ந்த மலையன் பட்டம்மா (வயது -57) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் விபத்துக்குள்ளான வேனின் சாரதியை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -