எச்.எம்.எம்.பர்ஸான்-
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் சவுதியைச் சேர்ந்த சகோதரி உம்மு உதுமான் அவர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்டு வரும் இத்திட்ட்டத்தின் 2017ம் ஆண்டிற்கான முதல் கட்ட நிதி வழங்கும் வைபவம் இன்று 24ம் திகதி செவ்வாய்க்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiftqYibo9te69aGk0jQLYIGIj3QtcejDY2tevmgomJnAglkKUkElFWz1xaP67MxbfeHE2kTk-0ORj4bKMVC1BKm_4US01aWoWkN6zddPsrMv6nkMky6UqTiRAWAd5hICj6PpRadi47Ss/s400/unnamed+%25288%2529.jpg)
நிகழ்வில் ஜம்இய்யாவின் பொதுத் தலைவரும் வாழைச்சேனை கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தருமான ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, செயலாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.எச்.அரபாத் ஸஹ்வி, உப தலைவர் ரீ.எல் அமானுல்லாஹ் சர்ஹீ, மற்றும் மௌலவி ஏ.எல்.பதுர்தீன் ஸஹ்வி மௌலவி அப்துர் ரஹ்மான் அஸ்ஹரி, ஸாஜஹான் நஹ்ஜி உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.