![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUAhZogl8rZMmgz_mz0lkkc-yPErMhyphenhyphenVVRev8XvzU5H5s-oj4SzJnZcXdbAOR41gzR-FaQQcyIjwx9KfWnCesIrekNzkyoW17Ul4XjwHyv2OuqeTiO670jqgDXZnZwM97YR1SQl0pnMIM/s640/vhk.jpg)
எம்.வை.அமீர்-
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் திறமையாக சித்தியடைந்த மாணவர்களைபாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2017. 01. 18 ஆம் திகதி சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது சமூக நலன்புரி மன்றத்தின் தலைவர் வைத்திய கலாநிதி எம்.எம்.ஏ.றிஷாத் தலைமையில், சமூக நலன்புரி மன்றத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியக் கலாநிதி என். ஆரிப் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்கள் பிரதம அதிதியாகவும், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பி.எம்.எம்.பதுர்தீன் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட பல் வேறு பிரிவுகளையும் சேர்ந்த கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மற்றும் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்விகற்ற சுமார் 44 மாணவர்கள் இங்கு பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின்போது உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் மற்றும் உயர் தேர்ச்சியுற்ற உயர்தர மாணவர்களும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.