முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் மேலும் 5 பேர் சிறைச்சாலையில் இருந்து தப்பி செல்ல திட்டமிட்டதாக இன்று பத்திரிகையில் வெளியிட்ட செய்தி அப்பட்டமான பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துமிந்த சில்வாவின் தந்தை இதனைத் தெரிவித்துள்ளார்.
இது அரசியல் சேறு பூசுதல் மற்றும் அரசியல் சூழ்ச்சி என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் 3 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 பேர் ஒரு நேரத்தில் தப்பி செல்ல முடியுமா என சிறைச்சாலை பிரதானி ஒருவரிடம் செய்திப் பிரிவு வினவியது.
இதற்கு பதில் அளித்த அவர், இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ஊடக நிறுவனத்திடமே இதனை வினவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.