எச்.எம்.எம்.பர்ஸான்-
உயர் தரப் பரீட்சை எழுதிய ஓட்டமாவடி- நாவலடி மர்கஸ் அந்-நூர் கலாபீட ஒன்பது மானவர்களும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளர். அம்மாணவர்களுக்கு கலாபீடத்தின் தலைவர், அதிபர், ஆசிரியர்கள், நிருவாகத்தினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
அதன் பிரகாரம் தற்போது வெளியாகிய க.பொ.த உயா்தரப்பரீட்சையில் தோற்றிய FM.பாஜித், MSM.பௌமின், JM.பௌஸான், HMM.பா்ஹான், MBA, அஸ்பாக் அஹமட் ஆகியோர் 3 (A) அதியுயா் சித்திகளையும், AMM.அஸாருதீன் 2 A, 1 B, MU. அஸாம் 2A, 1 C, HM.லரிப்தீன் A, B, C என பெறுபேறுகளைப் பெற்று கலாபீடத்திற்கு பெருமை சோ்த்துள்ளனா்.