ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவி பாத்திமா அரூஸா உயிரியல் தொழில் நுட்பப்பிரிவில் மூன்று A சித்திகளுடன் மாவட்டத்தில் முதலாமிடத்தினையும் அகில இலங்கை ரீதியாக மூன்றாமிடத்தினையும் பெற்று ஓட்டமாவடி பிரதேசத்திற்கும் மாவட்டத்திற்கும் தேசியத்திற்கும் நூற்றாண்டினைக் கொண்டாடவிருக்கும் பாடசாலைக்கும் நற்பெயரினைத் தேடிக்கொடுத்துள்ளர்.
அவரை நேரில் சென்று பாராட்ட மாணவியின் வீட்டுக்கு இன்று இரவு திடீர் விஜயம் மேற்கொண்டார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட். மாணவியின் வீட்டுக்குச் சென்று அவருக்கும் மாணவியின் பெற்றோருக்கும் வாழ்த்துக்கூறியதுடன் மேலதிக விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.