அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், கே.புஸ்பகுமார |
அபு அலா-
அம்பாறை மாவட்ட, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கி வந்த திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (24) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த பல வருட காலமாக மாவட்ட வைத்தியசாலையாக இயங்கி வந்த இந்த வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தித் தரவேண்டும் என்ற வேண்டுகோளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமார மற்றும் குறித்த பிரதேச மக்கள் வேண்டிக்கொண்டமைக்கமைவாகவே இந்த மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டது.
அற்கமைவாக குறித்த வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான வர்த்தக மாணி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேலும் தெரிவித்தார்.
குறித்த வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு முன்னின்று உழைத்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமார தனது தனிப்பட்ட வாழ்த்தினையும் திருக்கோவில் மக்கள் சார்பிலும் தனது வாழ்த்தினையும், நன்றியினையும் தெரிவித்தார்.