திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் விபத்து: ஒருவர் பலி மற்றவர் காயம்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி கங்கை பாலத்துக்கருகில் டிப்பர் வாகனமும் முற்சக்கர வண்டியும் இன்று (31)காலை 11மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் மூதூர்.பவர் ஹவுஸ் வீதியைச்சேர்ந்த எஸ்.திருமாறன் (40வயது) உயிரிழந்துள்ளதுடன் அதே இடத்தைச்சேர்ந்த என்டனி பிரேம் (30வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -