அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி கங்கை பாலத்துக்கருகில் டிப்பர் வாகனமும் முற்சக்கர வண்டியும் இன்று (31)காலை 11மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் மூதூர்.பவர் ஹவுஸ் வீதியைச்சேர்ந்த எஸ்.திருமாறன் (40வயது) உயிரிழந்துள்ளதுடன் அதே இடத்தைச்சேர்ந்த என்டனி பிரேம் (30வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.