ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன்-
ஒலுவில் துறைமுகத்தில் காணப்படும் குறைபாடுகளையும், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும்கேட்டறிந்து கொள்வதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஒலுவில்துறைமுகத்திற்கு சனிக்கிழமை (21) விஜயம் செய்தார்.
இதன்போது ஒலுவில் துறைமுகத்தின் படகுப் பாதை மண்ணால் மூடப்பட்டதனை கப்பல் மூலம்அகழ்வதனை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்.
பிரதி அமைச்சர் ஹரீஸின் அழைப்பின் பேரில் மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர அம்பாறைக்கு அடுத்தவாரமளவில் வருகை தரவுள்ளார். அமைச்சரின் இந்த வருகையோடு ஒலுவில் துறைமுகத்தில் காணப்படும்குறைபாடுகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பவற்றை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
இவ்விஜயத்தில் பிரதி அசை;சருடன் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா,கே.எம்.தௌபீக், பிரதி அமைச்சரின் ஊடகச் செயலாளர் றியாத் ஏ.மஜீத் உள்ளிட்ட மீனவ சங்க பிரதிநிதிகள்சகிதம் கலந்து கொண்டனர்.